6 மணி ஆச்சுன்னா போதும்.. படப்பிடிப்பை நிறுத்தும் வெங்கட்பிரபு- திக்குமுக்காடும் தயாரிப்பாளர்.? என்ன காரணம் தெரியுமா..

சினிமா உலகில் ஒரு படம் உருவாக இயக்குனர் படாத பாடு படுகிறார்கள். குறிப்பிட்ட தேதியில் படத்தின் பட்ஜெட்டில் நடிகர்களை வைத்து படங்களை எடுக்க ஒவ்வொரு இயக்குனர்களும் முட்டி மோதுகின்றனர் அதனால் படப்பிடிப்பு எப்போதுமே விறுவிறுப்பாக இருக்கும்.

ஆனால் ஒரு சில இயக்குனர்கள் மட்டும் படப்பிடிப்பை மிக ஜாலியாக வைத்துக் கொள்வார்கள் அந்த இயக்குனர்கள் லிஸ்டில் ஒருவராக இருப்பவர் தான் இயக்குனர் வெங்கட் பிரபு. இவர் தமிழ் சினிமா உலகில் இயக்குனராகவும் நடிகராகவும் தொடர்ந்து பயணித்து வெற்றி கண்டு வருகிறார்.

குறிப்பாக இயக்குனர் வேலையை ரொம்ப விரும்பி செய்கிறார் வெங்கட்பிரபு இதுவரை அஜித்தை வைத்து மங்காத்தா, சிம்புவை வைத்து மாநாடு போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கூட நடிகர் அசோக்செல்வனை வைத்து மன்மதலீலை எனும் படத்தை எடுத்து வெற்றி கண்டார்.

வெங்கட்பிரபு எப்பொழுதும் தனது ஷூட்டிங் ஸ்பாட்டை கலகலப்பாக வைத்துக்கொள்ள ரொம்ப விரும்புவார் ஏனென்றால் வரும் ரொம்ப ஜாலியான டைப் என சினிமா வாசிகள் பலரும் கூறுகின்றனர் இவர் தனது படப்பிடிப்பு தளத்தை எவ்வளவு ஜாலியாக வைத்திருக்கிறாரோ அதே அளவிற்கு வேலையையும் அழகாக வாங்கிவிடுவார் இவர் காலையில் தனது படப்பிடிப்பை தொடங்கி மாலை 6 மணி வரை ஆலோசனை நடத்துவார்.

அதன்பிறகு எந்த ஒரு கதாபாத்திரம் எடுக்க வேண்டியதாக இருந்தாலும் அடுத்த நாள்தான் ஷூட்டிங் எடுப்பாராம்.  6 மணிக்கு மேல் ஏன் வெங்கட்பிரபு ஷுட்டிங் எடுக்காமல் என்ன செய்கிறார் என்று பார்த்தால் அவர் 6 மணிக்கு மேல் தனது நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி மூடுக்கு மாறி விடுவாராம். செம ஜாலியாக இரவு பொழுதை கழிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

Leave a Comment