தமிழில் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட 5 மாஸ் திரைப்படங்கள் இதோ.! அதுவும் இந்த படம் வேற லெவல் போங்க..

தமிழ் சினிமா புதியதை நோக்கி செல்வதால் வித்தியாசமான மற்றும் புதிய கதைகளை நோக்கி இயக்குனர்களும் படையெடுக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் புதிய மற்றும் வித்தியாசமான திரைப்படங்கள் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்துவது வழக்கம் இது ஒரு பக்கம் இருந்தாலும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் கதைகளும் தமிழ் சினிமாவில் வெற்றி தோல்வியை பெற்றிருக்கின்றன.

அப்படி தமிழ் சினிமாவில் ஐந்து உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இன்றளவும் மக்கள் மற்றும் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்து வலம் வருகிறது அதை எந்தெந்த படங்கள் என்பதை தற்போது பட்டியலிடப்படுகின்றன.

1.சத்யசிவா இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கழுகு. இத்திரைப்படம் திரில்லர் காமெடி ரொமான்ஸ் என அனைத்தும் கலந்த படமாக உருவாகி இருந்தது படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது கழுகு படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

2.வழக்கு எண் 18/ 9 என்ற மாறுபட்ட கதையை தேர்ந்தெடுத்து இயக்கி இருந்தார் பாலாஜி சக்திவேல். இந்த படத்தின் கதை மிக சிறப்பாக இருந்தால் புதுமுக மற்றும் இளம் நடிகர்களை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியனார். படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு நல்லதொரு வசூலையும் வாரி குவித்தது இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும் இந்த திரைப்படம் 2012ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

3. அட்டகத்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் தினேஷ் அதன்பிறகு காதல் மற்றும் ஆக்ஷன் நிறைந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த தினேஷ் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்தின் கதையை தேர்ந்தெடுத்து நடித்து இருந்தார் அந்த திரைப்படமே விசாரணை இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியானது.

இந்த திரைப்படம் இன்றளவும் படத்தை பார்ப்பவர்களுக்கு பதைபதைக்கும் படமாக இருந்து வருகிறது.

4. காதல் சமந்தப்பட்ட படங்களை கொடுத்து வந்த இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இவர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில் உருவான திரைப்படம் தான் நடுநிசி நாய்கள் இந்த சமந்தா, அஷ்வின் மற்றும் பல பிரபலங்கள் நடித்து இருந்தனர் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து நல்லதொரு வரவேற்பை பெற்றது இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.

5. ராம்கோபால் வர்மா இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரத்த சரித்திரம் இத்திரைப்படத்தில் முன்னணி நடிகரான சூர்யா முக்கியமான ரோலில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது இந்த திரைப்படம் அரசியல் மற்றும் ஆக்சன் கலந்த திரைப்படமாக இருந்தது இது ஒரு உண்மைச் சம்பவத்தை அப்படியே தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.

Leave a Comment