தமிழ் சினிமாவை தொங்கலில் விட்டு விட்டு அக்கட தேசம் சென்ற 5 இயக்குனர்கள்.! பாலிவுட்டில் மாஸ் காட்டும் அட்லீ.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன அது போல் இளம் இயக்குனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆம் அண்மைக்காலமாக இளம் இயக்குனர்கள் பலரும் எடுத்த உடனே டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வெற்றி கண்டு வருகின்றனர்.

இதனால் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களும் இளம் இயக்குனர்களுடன் இணைந்தே பணியாற்று இருக்கின்றனர். இதனால் பழைய இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கிவிட்டன. அதனால் தமிழை தாண்டி மற்ற மொழிக்கு தவிய ஐந்து இயக்குனர்கள் பற்றி பார்ப்போம்.

1. ஏ ஆர் முருகதாஸ் : இவர் இயக்கும் படங்கள் மற்ற படங்களின் கதையின் சாயலில் இருப்பது போன்ற குற்றச்சாட்டு வந்த வண்ணமே இருந்ததால் தமிழ் சினிமாவே வேண்டாம் என்று பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். 2.ஷங்கர் : தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை வைத்து இருக்கும் ஷங்கருக்கு அண்மை காலமாக டாப் நடிகர்களின் கால்ஷீட் அதிகம் கிடைக்காத காரணத்தினால் தற்போது தெலுங்கில் ராம்சரனை வைத்து படம் இயக்கி வருகிறார்.

3.லிங்குசாமி : தமிழில் இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் தோல்வியை சந்தித்ததை எடுத்து தெலுங்கு பக்கம் திரும்பி தி வாரியார் என்ற படத்தை கொடுத்தார். அந்த படமும் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.  4. அட்லி : இயக்குனர் அட்லி விஜயுடன் சேர்ந்த மூன்று ஹிட் படங்களை கொடுத்தார் ஆனால் இவர் மற்ற படங்களை பார்த்து காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனம் வந்த வண்ணமே இருந்ததால்..

பாலிவுட் பக்கம் திரும்பி ஜவான் எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  5. மோகன் ராஜா : இவர் ஜெயம் ரவியுடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார். தற்போது தமிழ் சினிமாவை தவிர்த்து மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

Leave a Comment