காதல் அழகானது என ஆழம் தெரியாமல் காலை விட்ட 5 நடிகைகள்.. ஒத்த ஆலமரமாக வாழும் சிக்ஸ் பேக் நடிகரின் சொந்தம்

சினிமா உலகில் இருக்கும் நடிகைகள் பலரும் 35 வயதில் தான் திருமணம் செய்துகிறார்கள் ஆனால் அதற்கு முன்பு காதலில் விழுவது உண்டு அப்படி சினிமாவையும் தாண்டி நிஜத்தில் உருகி உருகி காதலித்து  வந்தாலும் கடைசி  நேரத்தில் எதையாவது சொல்லி கழட்டி விடுகிறார்கள் அப்படி நடிகைகளை பற்றி விலாவாரியாக பார்ப்போம்..

nagma
nagma

நக்மா :  90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வந்த இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான் ஆள் பார்ப்பதற்கு  அழகாக இருந்ததால் இவரை பல நடிகர்கள் காதலித்தனர் ஆனால் இவர் 2001 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் கங்குலியை உருகி உருகி காதலித்ததாக கிசுகிசுகள் வெளியாகின.

மேலும் சரத்குமாருடன் ரகசிய தொடர்பில் இருந்ததாகவும் பேச்சுக்கள் எல்லாம் வெளியாகின.  மேலும் நடிகர் ரவி கிஷன் மற்றும் மனோஜ் திவாரி ஆகிய அவர்களை இவர் காதலிக்காக வந்தார் ஆனால் இதையெல்லாம் தோல்வியில் முடிய 48 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

sobana
sobana

ஷோபனா  : தமிழ் சினிமாவில் கமல், பாக்யராஜ் போன்ற நடிகர்களுடன் நடித்து பேரையும், புகழையும் பெற்ற இவர் 53 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் ஆனால் இவர் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் பிரபல நடிகர் ஒருவரை உருகி உருகி காதலித்து உள்ளார் ஆனால் கடைசியில் ஒன்று சேர முடியாமல் போக தற்பொழுது பரதநாட்டிய பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் அதிலேயே முழு கவனமும் இருக்கிறதாம்.

கௌசல்யா : 90களில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த பிரபலமான இவர் படங்களில் பெரிதும் கவர்ச்சி காட்டியதுகிடையாது ஆனால் இவருக்கென ரசிகர்கள் இருந்தனர் இவர் 35 வயதை தாண்டிய பிறகும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இவர் யாரை காதலித்தார் என்பது இப்பொழுது வரை யாருக்குமே தெரியாது.

trisha
trisha

திரிஷா :  மாடல் அழகியாக இருந்து திரைக்கு வந்த இவர்  20 வருடங்களுக்கு மேலாக நடித்து வருகிறார். இப்போதும்  மார்க்கெட் உச்சத்திலேயே இருக்கிறார்  40 வயதாகியும் இளமை குறையாமல் இருக்கும் இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை ஆனால் இவர் 2015 ஆம் ஆண்டு வருண்மணியன் என்பவரை உருகி உருகி காதலித்தார். திருமணம் வரை போய் மன கசப்பால் இருவரும் பிரிந்தனர்.

தபு : பாலிவுட்டில் பிரபல நடிகையாக வரும் தபு தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மற்றும் ஒரு சில படங்களில் தலைகாட்டி உள்ளார் இப்படிப்பட்ட தபு இதுவரை திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார். இவர் படங்களில் நடிக்கும் பொழுது சஞ்சய் கபூருடன் நெருங்கிய பழகி வந்தார் குடும்பத்தில்  ஏற்பட்ட சிக்கல் காரணமாக காதல் முடிவடைந்தது அதன் பிறகு ஒண்டிக்கட்டையாகவே வாழ்ந்து வருகிறார்