சினிமாவை விட்டுவிட்டு சீரியலில் கல்லா கட்டும் 5 நடிகர்கள்.! படத்தில் கிடைக்கும் சம்பளத்தை ஒரே மாதத்தில் தட்டி தூக்கும் நடிகர்..

Tamil Actors: சின்னத்திரை மூலம் அறிமுகமாகி தற்பொழுது வெள்ளி திரையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் இருக்கின்றனர். இதனை அடுத்து தற்பொழுது சமீப காலங்களாக வெள்ளித்திரையில் நடித்து வந்த பிரபலங்கள் சின்னத்திரைக்கு அறிமுகமாகி கல்லாகட்டி வருகின்றனர் அப்படிப்பட்ட 5 நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.

சரவணன்: ஹீரோவாகவும் குணச்சித்திர நடிகராகவும் பிரபலமான சரவணன் 2007ல் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார் அதன் பிறகு சில பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற வந்த இவர்  தற்பொழுது மகாநதி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

பிஞ்சிலேயே பழுத்து வெம்பி போன 5 நடிகைகள்.! 18 வயது தொட்டதும் இவங்க ஆட்டம் மட்டும் ஓயல

மகாநதி சங்கர்: மகாநதி படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சங்கர் பாட்ஷா, தீனா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சன் டிவியின் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அப்படி நாதஸ்வரம், நந்தினி, மாயா போன்ற சீரியலில் நடித்துள்ளார் தற்பொழுது வானத்தைப்போல சீரியலில் நடித்து வருகிறார்.

வேல ராமமூர்த்தி: வில்லனாக பிரபலமான இவர் தற்பொழுது மறைந்த நடிகர் மாரி முத்துவிற்கு பதிலாக சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் நடிப்பதற்கு ஒரு எபிசோடுக்கு ரூ.40 ஆயிரம் சம்பளம் வாங்கி வருகிறாராம்.

ஸ்ரீ குமார்: ரங்கூன், தெறி, சின்னா போன்ற படங்களில் நடித்து வந்த ஸ்ரீகுமார் தொடர்ந்து சின்ன திரையில் நடித்து வருகிறார் இதன் மூலம் பிரபலமான ஸ்ரீ குமார் ஏராளமான பெண் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

வில்லனாக களம் இறங்க போகும் சூப்பர் ஸ்டார்.. எந்திரனுக்கு டப் கொடுக்க போகும் ரஜினி..

சஞ்சய்: 80 காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்த ஜெய்சங்கரின் மகன் பிரபல தொழிலதிபர் சஞ்சய் சங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

Exit mobile version