400 கோடி மெகா பட்ஜெட்.. நடிகையால் சிக்கித்தவிக்கும் ராஜமவுலி.! படத்தின் நிலைமை தான் என்ன.?

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி, இவர் இயக்கிய பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் கொண்டாடினார்கள் அதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்து விட்டார். அதனால் ராஜமௌலி அடுத்து எந்த திரைப்படத்தை இயக்க போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அடுத்ததாக ராஜமவுலி RRR படத்தை இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வந்ததும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தார்கள், இந்தத் திரைப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி வருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகிய முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் பிரபல பாலிவுட் நடிகரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார் வில்லனாக அஜய் தேவ்கான் நடித்துவருகிறார்.

இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் கமிட்டாகியிருக்கும் ஆலய பாட்டால் 400 கோடி பட்ஜெட் திரைப்படத்திற்கு நாமம் விழுந்து விடுமோ என கவலையில் இருக்கிறது படக்குழு, ஏனென்றால் சமீபத்தில் நடந்த சுஷாந்த்தின் தற்கொலை தான் காரணம், இது நாட்டையே உலுக்கி வருகிறது, இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆலியபாட் சுஷாந்த் பற்றிய கேள்விக்கு பதிலளித்து தான் வினையாக முடிந்துவிட்டது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சுஷாந்த்தை திருமணம் செய்ய விரும்புகிறீர்களா அல்லது கொலை செய்ய விரும்புகிறீர்களா என கேட்டுள்ளார்கள், ஆனால்  ஆலியா பட் கொலைசெய்ய ஆசைப்படுவதாக கூறினார் இந்த பதில்தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுளளது.

இவர் பேசியது பற்றி தற்போது விமர்சனம் எழுந்து வருகிறது அதனால் ராஜமௌலியின் படத்திற்கு ஏதாவது பிரச்சனை வருமோ என படக்குழு பீதியில் இருக்கிறது தற்போது ராஜமவுலி என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

Leave a Comment