9 வயது சிறுமிக்கு 14 வயது சிறுவனால் நடந்த கொடூரம்.! போனில் பலான படத்தை பார்த்ததால் நடந்த விபரீதம்

சமீபகாலமாக பெண்களுக்கு எதிராக நடக்கும் கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன, அந்த வகையில் திருச்சி மணப்பாறை அடுத்து கிராமத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமி இவர் அருகே உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து நான்காம்வகுப்பு போக இருக்கிறார்.

அந்த சிறுமியின் வீட்டிற்கு அருகே 14 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார் அந்த சிறுவன் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு ஒன்பதாம் வகுப்பு செல்ல இருக்கிறார், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சிறுமியும் சிறுவனும் டிவி பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அப்பொழுது பிற்பகல் 2 மணி அளவில் சிறுமி இயற்கை உபாதையை கழிக்க 200 மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு செல்கிறார், சிறிது நேரம் கழித்து சிறுமி மல்லி தோட்டத்தில் இறந்து கிடப்பதாக அந்த சிறுவன் சிறுமியின் தாத்தாவிடம் கூறுகிறார். உடனே அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்த பொழுது இரத்த வெள்ளத்தில் சிறுமி மயங்கி கிடந்துள்ளார்.

அந்த சிறுமியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் மேலும் சம்பவ இடத்தில் 14 வயது சிறுவன் அணியும் பள்ளி சீருடை கால்சட்டை கிடந்துள்ளது, அதுமட்டுமில்லாமல் அந்த சிறுமியின் ஹேர்பேண்ட் ரத்த கரை படிந்த கல், சிறுமியின் துணி ஆகியவையும் கிடைத்துள்ளன. அந்த இடத்தில் 14 வயது சிறுவனின் பள்ளி சீருடை இருந்ததால் அங்கு இருந்த சிறுவன் மீது போலீசாரின் பார்வை விழுந்தது.

உடனே அந்த கால்சட்டை உன்னுடைய தான என கேட்டுள்ளார் ஆனால் என்னுடையது அல்ல என சிறுவன் மறுத்துள்ளார், ஆனால் அந்த சிறுவனின் தங்கை இது என்னுடைய அண்ணன் உடையதுதான் என உறுதிப்படுத்தியுள்ளார், உடனே விசாரணையை சிறுவனிடம் தீவிர படுத்தினார்கள் உடனே மல்லி தோட்டத்தில் ஒரு பகுதியில் பூமியில் புதைத்து வைத்திருந்த சட்டையை எடுத்துக் கொடுத்தார் சிறுவன், அவரது வீட்டில் சோதனை செய்யும் பொழுது பள்ளி சீருடை ஒன்று குறைந்துள்ளது.

அதனால் சிறுவன் சிக்கிக் கொண்டான், போலீசார் விசாரித்ததில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன, சிறுவன் தன்னுடைய தந்தையின் ஆண்ட்ராய்டு செல்போனை அடிக்கடி பயன்படுத்தி உள்ளார், கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் அவர் யூ டியூப் உள்ளிட்ட இணையதளங்களில் தவறான வீடியோக்களை பார்த்து உள்ளார்.

சம்பவம் நடந்த அன்று சிறுமியை பின்தொடர்ந்த சிறுவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் சிறுவனுடன் கடுமையாக போராடிய சிறுமி அவரிடமிருந்து தப்பி எழுந்துவிட முயன்றுள்ளார் அதுமட்டுமில்லாமல் இங்கு நடந்த அனைத்தையும் பெற்றோரிடம் கூறி விடுவதாக மிரட்டியுள்ளார் சிறுமி. அதனால் பயந்து போன சிறுவன் சிறுமியை அடித்து கீழே தள்ளி பக்கத்தில் இருந்த கல்லை சிறுமியின் தலையின் மீது போட்டுள்ளார் அதில் சிறுமி ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

சிறுவனை கிடுக்கிப்பிடி விசாரணையில் விசாரித்ததில் இது தெரியவந்துள்ளது, மேலும் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பெற்று வந்த சிறுமி நள்ளிரவிலேயே உயிரிழந்தார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

வீடுகளில் சிறுவர் மற்றும் சிறுமிகள் இருந்தால் அவர்களிடம் செல்போன் கொடுப்பதால் ஏற்படும் பிரச்சனையை உணர்ந்து பெற்றோர்கள் செயல்பட வேண்டுமென போலீசார் அறிவுறுத்தி உள்ளார்.

Leave a Comment