நடிகர் சூர்யாவை மலைபோல் நம்பி இருக்கும் 2 முன்னணி இயக்குனர்கள்..! அவங்க யாருன்னு தெரியுமா..

தமிழ் சினிமாவில் பல சிறந்த படங்களை கொடுத்து வரும் சூர்யா தற்போது பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடித்த சூரறை போற்று திரைப்படத்திற்கு அண்மையில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது மற்றும் அந்த படத்தில் நடித்த சூர்யாவிற்கும் சிறந்த நடிகருக்கான விருது பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில் சூரியா பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வனங்கான் திரைப்படத்தில் நடித்து தயாரித்து வந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வந்த நிலையில் என்ன காரணம் என்று தெரியவில்லை சூர்யா இந்த படத்தில் நடித்துக் கொண்டு வரும் போதே தனது அடுத்த படத்திற்கான பூஜையை போட்டுள்ளார்.  ஆம் சூர்யா சிறுத்தை சிவா உடன் இணைந்து ஒரு படத்தில் இணைய உள்ளார் அதற்கான பூஜையை போட்டு தற்போது ஷூட்டிங் நடந்து வருகின்றன மற்றும் வெற்றிமாறனுடன்..

ஒரு படம் சுதா கொங்கரா போன்ற இயக்குனர்களுடனும் அடுத்தடுத்து சூர்யா கமிட் ஆக உள்ளார். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இரண்டு முக்கிய இயக்குனர்களாக பார்க்கப்படும் லோகேஷ் மற்றும் பா ரஞ்சித்தின் இயக்கத்திலும் சூர்யா நடிக்க உள்ளார். ஆம் இயக்குனர் லோகேஷ் தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு இயக்குனராக திகழ்ந்து வருகிறார்.

இவர் இயக்கிய முதல் படமான மாநகரம் படத்தை இயக்கும் போதே சூர்யாவை வைத்து இரும்பு கை மாயாவி என்னும் படத்தை இயக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் அப்போது அது நடக்கவில்லை. தற்போது இந்த படம் குறித்து சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு பேசப்பட்டு வருகின்றன. அதனால் கூடிய விரைவில் இவர்களது கூட்டணியில் இந்த படம் உருவாகும் என தெரிய வருகிறது.

இதற்கு இடையே இயக்குனர் பா ரஞ்சித் சமீபத்தில் அடுத்த பேட்டி ஒன்றில் சூர்யாவின் படம் குறித்து பேசி உள்ளார். பா ரஞ்சித் மற்றும் சூர்யா இருவரும் ஜெர்மன் எனும் படத்தில் இனி இருந்தார்களாம் இது பா ரஞ்சித்தின் கனவு படமாம் அப்படத்திற்காக விரைவில் ஜெர்மன் செல்ல இருப்பதாகவும் அப்படம் முழுக்க VFX இருக்கும் என பேசி உள்ளார் பா ரஞ்சித்.

Leave a Comment