ராகவியின் தற்கொலைக்கு முரளி தான் காரணம் என உண்மையை தெரிந்து கொண்ட ரஜினி.! விறுவிறுப்பான எபிசோட்களுடன் ரஜினி சீரியல்..

தற்பொழுதுள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சிகளில் முன்னணி வகித்து வரும் தொலைக்காட்சி தான் ஜீ தமிழ். ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மிகவும் சுவாரசியமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் 2k கிட்ஸ்களை கவர வேண்டும் என்பதற்காக காதல்,ரொமான்ஸ் போன்ற காட்சிகளை அதிகமாக வைத்து வருகிறார்கள் அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து புதுமுக நடிகர், நடிகைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் ஜீ தமிழில் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமான சீரியல் தான் ரஜினி.

இந்த சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது திருமணத்தில் எதிர்பாராத விதமாக ரஜினியின் கழுத்தில் பார்த்திபன் தாலி கட்டிய நிலையில் தற்கொலைக்கு முயன்றதால் ராகவி கோமாவுக்கு போய்வுள்ளார் இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்.

ராகவிக்கு சுயநினைவு வந்தால் எல்லா உண்மைகளையும் கூறுவார் எனவே அனைவருக்கும் தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுயநினைவு திறமையை சில நிமிடங்களிலேயே மீண்டும் கோமாவுக்கு போய்விட்டார். இப்படிப்பட்ட நிலை ராகவியின் தற்கொலை முயற்சிக்கு ரஜினி தம்பி முரளி தான் காரணம் என பார்த்திபனுக்கு தெரிய வருகிறது.

இதனால் கோபமடைந்து வீட்டுக்கு வரும் பார்த்திபன் முரளியை தாக்க பிறகு ரஜினி அவனை அடிக்க நீ யாருன்னு தடுக்க ராகவியின் தற்கொலை முயற்சிக்கு இரண்டாம் காரணம் இவன் பண்ண தப்புக்கு நாம் பழி சுமந்துட்டு இருக்கும் என ஆதாரங்களை காட்டுகிறார். எனவே அனைத்து உண்மைகளும் ரஜினிக்கு தெரிய வர அடுத்ததாக ரஜினி எடுக்கப் போக முடிவு என்ன‌ என இனி வரும் எபிசோடுகளில் இதனை மையமாக வைத்து ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment