150 கோடி அண்ணாத்த திரைப்படம் வசூல் செய்தது சுத்தப் பொய்.? இணையத்தில் வெளியான புதிய தகவல்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கோலாகலமாக தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்த திரைப்படம் தான் அண்ணாத்த மீனா,குஷ்பூ,கீர்த்தி சுரேஷ்,நயன்தாரா,சூரி போன்ற பல முன்னணி பிரபலங்கள் இந்த திரைப் படத்தில் நடித்திருந்தால் படம் ரசிகர்கள் மத்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிவிட்டது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் கிராமத்து கதை களம் கொண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று விட்டது என்று தான் கூற வேண்டும்.அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பு இந்த திரைப்படத்தில் மிகவும் பிரமாதமாக இருந்துவிட்டது இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பாராட்டாத  பிரபலமே இல்லை என்ற  அளவிற்கு பலரும் பாராட்டினார்கள்.

மேலும் அண்ணாத்த திரைப்படம் வசூல் ரீதியாக தமிழகத்தில் அதிகம் வசூல் செய்ததாக கூறப்பட்டது.அதாவது அண்ணாத்த திரைப்படம் வசூல் ரீதியாகத் தமிழகத்தில் 150 கோடி வசூல் செய்திருந்தது எனவும் தகவல் வைரலாகி வந்த நிலையில் தற்போது அது முழுக்க முழுக்க பொய் என ஒரு தகவல் கசிந்துள்ளது.

அண்ணாத்த திரைப்படம் தமிழகத்தில் முதல் நான்கு நாட்களில் மட்டும் ரூபாய் 73 கோடியும் இரண்டாவது வாரத்தில் ரூபாய் 15 கோடியும் மூன்றாவது வாரத்தில் ஆறு கோடியும் வசூல் செய்ததாக கூறப்படுகிறது இதனை வைத்து பார்த்தால் தமிழகத்தில் அண்ணாத்த திரைப்படம் மொத்தமாக 94 கோடி வசூல் செய்துள்ளது என சினிமா வட்டாரத்தில் இருந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது.

rajini
rajini

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் அண்ணாத்த திரைப்படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதானா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்த திரைப்படம் வெளியானாலும் அதிகம் வசூல் செய்து விடும் எதற்காக இந்த திரைப்படத்தின் வசூல் மட்டும் குறைந்தது என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment