இதுவரை வெளியாகாமல் கிடப்பில் கிடக்கும் 125 திரைப்படங்கள்.! புள்ளி விவரத்துடன் வெளியிட்டு பயமுறுத்தும் விஷால்.?

Low budget movie  : நடிகர் விஷால் கடைசியாக தற்பொழுது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகியது இந்த திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, ரிது வருமா, அபிநயா, நிழல்கள் ரவி என பலரும் நடித்திருந்தார்கள்.

பிறகு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால் வசூலில் சக்கை போடு போட்டு வந்தது இந்த நிலையில் மார்க் ஆண்டனி  திரைப்படம் விரைவில் 100 கோடி வசூலிக்கும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் 50 கோடியை கடந்துள்ளது தற்பொழுது விஷாலின் மார்க் ஆண்டனி, இது அனைத்தும் எஸ் ஜே சூர்யாவால் தான் சாத்தியமானது என ஒரு தரப்பு மக்கள் கூறி வருகிறார்கள்.

மார்க் ஆண்டனி வெற்றி பெற்றுள்ளதால் வெற்றியை பட குழுவினர் அனைவரும் சென்னையில் பிரபலமான ஒரு இடத்தில் கொண்டாடி உள்ளார்கள் இதில் பங்கேற்ற பல சினிமா பிரபலங்கள் மேடையில் ஏறி பேசினார்கள் அப்பொழுது விஷாலும் பேசினார் அவர் பேசும்பொழுது மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இனி தொடர்ந்து நான் நல்ல திரைப்படங்களில் நடிப்பேன் என கூறினார்.

அதுமட்டுமில்லாமல் அதன் பிறகு பேசிய விஷால் பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளார் அதாவது தற்பொழுது படங்கள் எடுத்து ரிலீஸ் செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது குறைந்த முதலீட்டில் எடுத்த 125 படங்கள் திரைக்கு வராமல் முடங்கி கிடக்கிறது அதனால் இனிமேல் ஒரு கோடியில் இருந்து நான்கு கோடி வரை பட்ஜெட்டில் படம் எடுக்கும் எண்ணத்தில் யாரும் சினிமாவிற்குள் வர வேண்டாம்.

தயவு செய்து அந்த தொகையை வங்கியில் டெபாசிட் செய்து கொள்ளுங்கள் தேவையில்லாமல் பணத்தை இழந்து விடாதீர்கள் அல்லது நிலத்தை வாங்கி போடுங்கள் பெண் இயக்குனர்களும் சாதிக்கிறார்கள் ஆண் இயக்குனர்களோ பெண் இயக்குனர்களோ அது முக்கியமில்லை யார் வந்து நல்ல கதை சொன்னாலும் அவர்கள் திரைப்படத்தில் நான் நடிப்பேன் என விஷால் கூறினார்.

மேலும் என்னுடைய திருமணம் கண்டிப்பாக நிச்சயம் நடக்கும் என் திருமணம் பற்றி எந்த ஒரு கிசுகிசுவும் பரப்ப வேண்டாம் எனக்கு திருமணம் முடிவானதும் கண்டிப்பாக நான் என்னுடைய அறிவிப்பை வெளியிடுவேன் என அந்த மேடையில் கூறியுள்ளார்.