முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்ததால் 100 கோடியை அள்ளிக் கொடுக்கும் படக்குழு.? விஜய்க்கு இணையாக சம்பளம் வாங்கும் ஹீரோ.!

டாப் நடிகர்கள் ரசிகர்கள் பட்டாளத்தை தனது சொந்த மொழியை தாண்டி பிற மொழிகளிலும் வைத்துள்ளனர் அதனால் அவரது திரைப்படங்கள் வெளிவரும் போது படம் படத்தின் பட்ஜெட்டையும் தாண்டி மிகப்பெரிய ஒரு வசூல் சாதனை படைக்கின்றனர்.

அதனால் நடிகர்களும் ஒவ்வொரு படத்தின் வெற்றியின் போது கணிசமாக தனது சம்பளத்தை உயர்த்துவது வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் ரஜினி, விஜய், அஜித் ஆகியவர்கள் சம்பளத்தையும் உயர்த்தி இருக்கின்றனர் சொல்லப்போனால் தென்னிந்திய சினிமா உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவர்கள் மூவரும் இடம்பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைப் போல 100 கோடி சம்பளத்தை வாங்க உள்ளார் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் ஒட்டுமொத்தமாக 300 கோடி வசூல் செய்தது இதன் இரண்டாவது பாகம் தற்போது அதிரடியாக உருவாகி வருகிறது.

இந்த படம் மக்கள் மத்தியில் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என்பதை படக்குழு நன்கு உணர்ந்து கொண்டு முன்பை விட இப்பொழுது படத்தின் பட்ஜெட்டை அதிகப்படுத்தி உள்ளது அதே சமயம் படம் முழுவதும் காடு சார்ந்த இடங்களில் படமாக்கப்படுகிறது இதற்காக நடிகர், நடிகைகள் ரொம்ப கணக்கிடுகிறார்கள் என்பதை படக்குழு உணர்ந்து தற்போது அவர்களுக்கும் சம்பளத்தை சற்று அதிகரித்துள்ளது.

குறிப்பாக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சுமார் 100 கோடி சம்பளமாக கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன இதன் மூலம் விஜய்க்கு நிகராக சம்பளம் வாங்கும் நடிகர்கள் லிஸ்ட்டில் புஷ்பா ஹீரோ அல்லு அர்ஜுன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment