தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் ஜெயம்ரவி ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்தாலும் போகப்போக தனது ரசிகர்களை திருப்திப்படுத்த ஒவ்வொரு படத்திலும் தனது மாறுபட்ட நடிப்பையும், கதை காலத்தையும் இவர் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் சமீபகால வெளியான திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அதிலும் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்து பணியாற்றிய திரைப்படம் தான் “தனி ஒருவன்” இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது.
அப்படத்தின் வெற்றியால் மோகன் ராஜா, ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமிக்கு ஆகிய முவருக்கும் மிகப் பெரிய கம்ப கொடுத்த படமாக இந்த படம் அமைந்தது. தமிழ் சினிமாவில் மூவருக்கும் நல்ல வரவேற்பும் கிடைத்தது. தற்போது ஜெயம்ரவி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னின் செல்வன் படத்தை நடித்து முடித்து விட்டு.
இயக்குனர் கல்யாண் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் அதுபோல மோகன் ராஜா தற்பொழுது லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி வைத்து படத்தை எடுக்கிறார் இருவரும் அந்த படத்தை முடித்துவிட்டு மீண்டும் இணைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
மீண்டும் இணையும் பட்சத்தில் தனி ஒருவன் இரண்டாம் பாகமும் உருவாகும் என பார்க்கப்படுகிறது.