திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான 10 நடிகைகள்.! அட லிஸ்டில் இந்த முன்னணி நடிகையும் இருக்கிறாரா.?

தமிழ் கலாச்சாரத்தை மறந்து திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான 10 தமிழ் நடிகைகளை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். பொதுவாக சினிமாவில் இருக்கும் நடிகைகள் பெரும்பாலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பார்கள் எங்கு திருமணம் செய்து கொண்டால் நமக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்று எண்ணி நடிகைகளும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பார்கள்.

ஆனால் தனுடன் நடிக்கும் நடிகர்களுடன் டேட்டிங் செய்வார்கள் அப்படி அவர்கள் டேட்டிங் செய்யும் போது சில நடிகைகள் கர்ப்பமாகியதும் உண்டு. அவர்களை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

சரிகா:- குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு கதாநாயகியாக மாறியவர்தான் நடிகை சரிகா இவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகர் கமல்ஹாசனை காதலித்து வந்தார். நடிகர் கமல்ஹாசனும் அந்த நேரத்தில் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கும் நிலையில் சரிகாவிருக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே காதல் மலர்ந்தது அதன் பிறகு சரிக்காவிற்கு குழந்தை பிறந்தது. தற்போது சரிகாவின் மகள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சுருதிஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

சுருதிஹாசன் பிறந்த பிறகுதான் நடிகர் கமல்ஹாசனும் சரிகாவும் சிவாஜி கணேசன் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேவி:- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற நடிகை ஸ்ரீதேவி அந்த சமயத்தில் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

போனி கபூரை திருமணம் செய்து கொண்ட இரண்டு மாதத்தில் குழந்தை பெற்றுக் கொண்டார். திருமணத்திற்கு முன்பாக 8 மாத கர்ப்பிணி பெண்ணாக இருந்துள்ளார் நடிகை ஸ்ரீதேவி. திருமணத்திற்கு முன்பாகவே தயாரிப்பாளர் போனி கபூரும் ஸ்ரீதேவியும் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

சுஜா வருணி:- நடிகை சுஜா வர்ணி பிக் பாஸில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் இவர் மிளகாய் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகர் சிவாஜியின் பேரனான சிவாஜி தேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்து கொண்ட ஆறே மாதத்தில் குழந்தை பெற்றுக் கொண்டார். இவர் திருமணம் செய்வதற்கு முன்பாக நான்கு மாத கர்ப்பிணியாக இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீரா ரெட்டி:- வாரணம் ஆயிரம், வேட்டை, போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை சமீரா ரெட்டி. இவர் பெங்களூரை சேர்ந்த அச்சை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் செய்து கொண்ட 7 மாதத்தில் குழந்தை பிறந்து விட்டது. ஆகையால் திருமணத்திற்கு முன்பு நடிகை சமீரா ரெட்டி மூன்று மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காம்னா :- விக்ரம் மற்றும் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் தான் நடிகை காம்னா. இவர் இதையதிருடன் என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும் அதேபோல மச்சக்காரன் என்ற திரைப்படத்தில் ஜீவனுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு சுராஸ் என்பவருடன் திருமணம் நடந்தது. இவருக்கும் திருமணம் ஆன 7 மாதத்தில் குழந்தை பிறந்து விட்டது. ஆகையால் இவரும் திருமணத்திற்கு முன்பு மூன்று மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

எமி ஜாக்சன்:- மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை எமி ஜாக்சன். இதனைத் தொடர்ந்து விக்ரம், தனுஷ், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

தமிழ் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். காதலித்து வந்தது மட்டுமல்லாமல் இருவரும் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள். இதன் காரணமாக நடிகை எமி ஜாக்சன் கர்ப்பம் ஆனார் குழந்தையும் பெற்றுக் கொண்டார். ஆனால் இவர்கள் இன்னமும் திருமணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குஷ்பூ:- 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை குஷ்பு. இவர் அப்போது உள்ள பிரபு, ரஜினி, கமல், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நேரத்தில் நடிகர் பிரபுவை காதலித்து வந்ததாக சில வதந்திகள் பரவியது.

அதன் பிறகு தான் குஷ்பு இயக்குனரும் நடிகருமான சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் சுந்தர் சி உடன் திருமணமான எட்டே மாதத்தில் நடிகை குஷ்புவிற்கு குழந்தை பிறந்து விட்டது என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

சாந்தினி:- சினிமாவில் பிரபல நடிகையான சாந்தினி அவர்கள் அரசியல்வாதி ஒருவரால் ஏமாற்றப்பட்டு கர்ப்பமாக இருப்பதாக ஒரு புகாரை கொடுத்துள்ளார். இந்த தகவல் அப்போதே வைரல் ஆனது. அதாவது அரசியல்வாதி மணிகண்டன் என்பவர் தன்னுடன் ஐந்து ஆண்டுகள் உறவில் இருந்ததாக கூறியுள்ளார் அது மட்டுமல்லாமல் தன்னுடைய மனைவிக்கும் தனக்கும் இடையே பல பிரச்சனைகள் இருப்பதாகவும் அதன் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறி இருக்கிறார்.

அதன் பிறகு இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தோம் நாளடைவில் தான் கர்ப்பமும் ஆனேன் என்று கூறியுள்ளார் நடிகை சாந்தினி. அதுமட்டுமல்லாமல் அரசியல்வாதி மணிகண்டன் அவர்கள் அந்த குழந்தையை கலைக்கச் சொல்லி இருக்கிறார் அவர் சொன்னதை கேட்டு நடிகை சாந்தினி அவர்கள் பிரபல மருத்துவமனையில் குழந்தை கலைப்பு செய்து இருக்கிறார். இதை ஒரு குற்றச்சாட்டாக முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலியானா :- தமிழில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை இலியானா. இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபலம் ஒருவரை காதலித்து வந்ததாக கூறபடுகிறது அது மட்டும் இல்லாமல் இருவரும் அடிக்கடி நெருக்கமாக இருந்த புகைப்படம் அந்த சமயத்தில் வெளியானது.

அதுமட்டுமல்லாமல் நடிகை இலியானா அந்த சமயத்தில் கர்ப்பமாகியதாகவும் சில தகவல் வெளியானது. ஆனால் இந்த செய்தி வெளியாகி நான்கு ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்களா இல்லை அது உண்மை தகவலா என்பது தெரியவில்லை.

கேப்ரியலா:- இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாலிவுட்டில் கொடிகட்டி பரந்த நடிகைகளில் ஒருவராக இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நடிகை கேப்ரியலா பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார் அது மட்டுமல்லாமல் அந்த பாலிவுட் நடிகருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அந்த நடிகர் தன்னுடைய முதல் மனைவியை 20 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு நடிகை கேப்ரியலாவை காதலித்து வந்தார் அதுமட்டுமல்லாமல் தன்னுடைய காதலி கர்ப்பமாக இருப்பதை புகைப்படமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த சமயத்தில் இருவருக்கும் திருமணமாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment