எங்கு சென்றாலும் தமிழை விட்டுக் கொடுக்காத ஏ.ஆர் ரகுமான்.! ரன்பீர் கபூரை வச்சி செய்த தக் லைஃப்..

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரகுமான் 10 வருடத்திற்கு முன்பு ரன்பீர் கபூருக்கு விருது வழங்கிய நிலையில் அப்பொழுது பயங்கரமாக கலாய்த்திருக்கும் தகவல் குறித்த வீடியோ சோசியல் வருகிறது. அதாவது இந்திய அளவில் பிரபலமாக இருந்து வரும் ஏ.ஆர் ரகுமான் இசை பலரையும் கவர்ந்திருக்கிறது. அனைத்து கவலைகளையும் கையில் இசை இருந்து வரும் நிலையில் பல வருடங்களாக இசையமைப்பதில் சிறந்த விலங்கி வருபவர் தான் ஏ.ஆர் ரகுமான்.

இவர் பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக சினிமாவிற்கு அறிமுகமானார் இவ்வாறு தமிழில் வெளியான ஏராளமான படங்களுக்கு இசையமைத்து வந்த நிலையில் இவருடைய புகழ் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது.

அதன் பிறகு ஹிந்தி ,ஆங்கிலம் உள்ளிட்ட மொழியிலும் இசையமைப்பதை தொடர்ந்தார். இவ்வாறு ஒரு கட்டத்தில் இசைப்புயல் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நிலையில் தமிழில் மிகவும் ஆர்வமுடையவர் எப்பொழுதும் தமிழை மதிக்க கூடியவர். ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழி நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் கூட அங்கு தமிழில் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அப்படிதான் பத்து வருடங்களுக்கு முன்பு அனைத்து மொழி நடிகர்களையும் வைத்து மிகப்பெரிய விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. அதில் ஏ.ஆர் ரகுமான் பங்கு பெற்ற நிலையில் ரன்வீர் கபூருக்கு விருது வழங்கினார். அப்படி ஹிந்தியில் அனைவரும் பேச ஏ.ஆர் ரகுமான் மட்டும் சிறந்த நடிகருக்கான விருது ரன்பீர் கபூருக்கான விருது என கூறியவுடன் அரங்கமே சிரித்தது.

இவ்வாறு ஏ.ஆர் ரகுமான் எங்கு சென்றாலும் தமிழை விட்டுக் கொடுக்க மாட்டார். பொதுவாக அனைத்து பிரபலங்களும் இடத்திற்கு ஏற்றார் போல் மாறி கொள்வது வழக்கம் ஆனால் ஏ.ஆர் ரகுமான் எங்கு சென்றாலும் நம்மளுடைய தமிழை விட்டுக் கொடுக்காமல் இருப்பது பலருக்கும் ரசிக்கும் வகைகள் அமைந்திருக்கிறது.

Leave a Comment