தனி ஒருவன்-2 படத்தின் மாஸ் அப்டேட்- வில்லன் யாரு பாருங்க, சும்மா தெரிக்குது
ரீமேக் படங்களாக எடுக்கிறார் என்ற விமர்சனத்துக்கு ஆளானவர் மோகன் ராஜா. இதனால் அவர் தன்னை நிரூபித்துகாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இயக்கிய படம் தனி ஒருவன்.

அந்த ஒரே ஒரு படம் அவர் வாழ்க்கையையே மாற்றிவிட்டது என்று கூறலாம். அவருக்கு மட்டும் இல்லாது ஜெயம் ரவி, அரவிந்த் சாமி இருவருக்கும் படம் நல்ல மார்க்கெட்டை பிடிக்கவும் உதவியிருக்கிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பது ஏற்கெனவே வந்த தகவல்.
படத்தின் வில்லனாக யார் இருப்பார்கள் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. இப்போது என்ன தகவல் என்றால் மாலிவுட் சினிமாவின் மாஸ் நடிகர் மம்முட்டியை வில்லனாக நடிக்க வைக்க மோகன்ராஜா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
