தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா, பல நடிகைகளுக்கு திருமணமாகிவிட்டால் பட வாய்ப்பு அமைவதில்லை, ஆனால் நடிகை சமந்தாவிற்கு தொடர்ந்து படவாய்ப்புகள் அமைந்து கொண்டு வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் சமந்தா சமீபகாலமாக நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வந்த சமந்தா சமீபகாலமாக குறிப்பிட்ட திரைப் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமந்தா சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்று ஓய்வு எடுத்துக்கொண்டு வந்தார், சுற்றுலாவில் இருந்துமீண்டும் திரும்பிய சமந்தா விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல என்று இரண்டு காதல் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் திரில்லர் கதை கொண்ட ஒரு திரைப் படத்திலும் நடித்து வருகிறார். நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் சமீப காலமாக தொகுப்பாளினியாக மாறியுள்ளார் நடிகை சமந்தா, ஆம் பிரபல தொலைக்காட்சியில் சாம் ஜாம் என்னும் பேச்சு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அதுமட்டுமில்லாமல் அந்த நிகழ்ச்சிக்கான உடையைத் தானே வடிவமைத்த வருகிறாராம் இந்த நிலையில் நீல நிற உடை அணிந்து ரசிகர்களை மயக்கயபடி ஒரு பார்வையை வீசியுள்ளார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.