நாங்கள் பிரிந்து விட்டோமா.. முதன்முறையாக நயன்தாரா விக்னேஷ் சிவன் அதிரடி பதில்.

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம், இவர்கள் இருவரும் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய பொழுது காதல் மலர்ந்தது, ஆனால் இதுவரை இருவரும் வெளிப்படையாக நாங்கள் காதலர்கள் தான் என்று சொல்லவில்லை.

ஆனால் பண்டிகை தினங்கள் பிறந்தநாள் தினங்கள் என அனைத்திலும் இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள், அதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று அங்கு விதவிதமான புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவார்கள் அடிக்கடி.

தற்பொழுது நயன்தாரா மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதற்காக படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் நயன்தாரா சுசீந்திரன் கோவில் பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட பல இடங்களுக்கு விக்னேஷ் உடன் சென்று சாமி தரிசனம் பெற்றார், அதுமட்டுமில்லாமல் கிறிஸ்மஸ் பண்டிகையின் பொழுது தனது காதலருடன் இணைந்து கொண்டாடினார்.

ஆனால் நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படத்தில் விக்னேஷ் சிவன் இடம்பெறவில்லை, அதேபோல் ஜி தொலைக்காட்சி வழங்கிய விருது விழாவிலும் நயன்தாரா மட்டும்தான் கலந்து கொண்டார், இதை உற்றுக் கவனித்த சிலர் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டதாகவும், திருமணத்திற்கு தொடர்ந்து நயன்தாராவை வற்புறுத்தியதாகவும் அதனால் நயன்தாரா மறுப்பு தெரிவித்ததாகவும் அதனால் இருவரும் பிரிந்து விட்டதாகவும் தகவல் வைரல் ஆனது.

இந்த நிலையில் இதுகுறித்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இடம் விசாரித்ததில் இது முற்றிலும் பொய் என  மறுத்துள்ளார்கள், விக்னேஷ் சிவன் புத்தாண்டின் போது நயன்தாராவுடன் தான் இருந்தார் எனவும், நயன்தாராவை புகைப்படம் எடுத்ததே  விக்னேஷ் சிவன் தான் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் ஜீ தொலைக்காட்சியில் விருது விழாவில் விக்னேஷ் சிவன் படபிடிப்பு வேலைகளால் நயன்தாரா உடன் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

Leave a Comment