sandy-master

என்னங்க நடக்குது நாட்டுல ஆளே இல்ல ரோட்டுல ! வைரலாகும் சாண்டி மாஸ்டரின் கொரோனா விழிப்புணர்வு பாடல் வீடியோ!!

சாண்டி மாஸ்டர் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும் இவரது இயற்பெயர் சந்தோஷ் குமார். இவர் பல ரியாலிட்டி ஷோக்களுக்கு நடன மாஸ்டராக பணிபுரிந்த வர். தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பாடலுக்கு நடன மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் காஜல் பசுபதி என்கின்ற நடிகை மற்றும் தொகுப்பாளராக பணிபுரிந்த வரை திருமணம் செய்து கொண்டார். பின்பு இவர்கள்  பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு சில்வியா என்கின்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.அவர்களுக்கு லாலா என்ற பெண் பெண்குழந்தையும் உள்ளது. இவர் கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் இரண்டாம் இடத்தை வென்றார். இவர் நடனம் ஆடுவது மட்டுமில்லாமல் நகைச்சுவை குணம் மிக்கவர். இவரே பாடல் எழுதி நடனம் ஆடுவதில் வல்லவர்.

கொரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இந்த நேரத்தில் பல பிரபலங்கள் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அதுபோல சாண்டியும் தனது மகள் லாலாவுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை உருவாக்கி சமூக வலைதலளத்தில் வெளியிட்டு உள்ளனர். இப்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

aishwarya

ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவராத படத்தின் காட்சி.! தற்பொழுது சமுகவலைதளத்தில் வைரலாகும் வீடியோ.!

இந்தியாவில் எத்தனை அழகிகள் இருந்தாலும் நமக்கு முதலில் ஞாபகம் வருவது ஐஸ்வர்யாவை தான்.இவர் 1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா என்ற பட்டத்தை வென்றார். இவரது அழகிற்கே பல கோடி ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக தற்போதுவரை வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் 1997 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ”இருவர்” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்குள் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவே அவரை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,ராவணன், எந்திரன் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர்  ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு என பிற மொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்பொழுது வரையிலும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஐஸ்வர்யா அவர்கள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாத்துறையில் நடிகையாக பணியாற்றி வலம் வந்து இருக்கிறார். இவர் 2007 ஆம் ஆண்டு ஹிந்தியில் முன்னணி நடிகரான அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்களுக்கு ஒரு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்கு பிறகும் தனது சிறந்த நடிப்பை வெளிக் காட்டி வந்து கொண்டிருக்கிறார் இந்த நிலையில் அவர் நடித்து வெளிவராத படத்தின் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது 1997ஆம் ஆண்டு ”ராதேஷ்யம் சீதாராம” என்ற திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா நடித்திருந்தார்.ஆனால் சில காரணங்களால் அந்த படம் வெளியாகவில்லை அந்த படத்தில் ஒரு பாடலுக்கு  நடனமாடியுள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்புக்கு உள்ளாக்கியது.

தற்பொழுது ஐஸ்வர்யா ராய் அவர்கள் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்திசுரேஷ், திரிஷா, அமிதாப்பச்சன், மோகன்பாபு, ஜெயராம், ஐஸ்வர்யா மேனன் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் நடிக்க உள்ளனர் இப்படம்  மிகப்பெரிய ஒரு பட்ஜெட்டில் உருவாகி உள்ளது இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் தமிழ் ,தெலுங்கு மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

vj-ramya

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிக்கொண்டே கேவலமாக கூட்டும் விஜே ரம்யா.! வைரலாகும் வீடியோ

சினிமாவில் எப்படி நடிகர்,நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் உண்டு அதுபோல  சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர் அந்த வகையில் முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் விஜே ரம்யா இவரை  மிகப் பெரிய ரசிகர் கூட்டம் பின் தொடர்ந்து வருகிறது.அந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

விஜே ரம்யா அவர்கள் சின்னத்திரையில் மட்டுமல்லாமல், பொது நிகழ்ச்சி, ரியாலிட்டி ஷோ ,இசை வெளியீட்டு விழா ,கலைநிகழ்ச்சி விழா என அனைத்திலும் தனது சிறந்த தொகுப்பினை வழங்கி வருகிறார். ரம்யா அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தினை விஜே ரம்யா பெரிதும் எதிர்பார்த்துள்ளார் அது மட்டுமில்லாமல் பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார் என்பது நாம் அறிந்ததே.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் ரம்யா அவ்வபொழுது தனது க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு தனது ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் தற்சமயம் கொரோனா வைரஸ் பரவி வருவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தடை ஏப்ரல் 14 வரை நீடிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வீட்டிலேயே முடங்கியுள்ள ரம்யா பொழுதுபோக்காக விழிப்புணர்வு வீடியோ,வீட்டில் வேலை செய்வது, பாட்டு பாடுவது என பலவற்றை செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவது அந்த வகையில் தற்பொழுது மாஸ்டர் படத்தில் உள்ள வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு கையில் துடைப்பத்துடன் டான்ஸ் ஆடிய ரம்யா வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

julie

கொரோனா விழிப்புணர்வு வீடியோவை போட்டதற்க என்னை இப்படி சொல்கிறாய் கதறும் ஜூலி.! வீடியோ இதோ!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்தவர் ஜூலி. இதன்மூலம் அவர் பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில்  பங்குபெற்றும் பிரபலமடைந்தார். இந்த நிலையில் பிறபல தொலைக்காட்சியான விஜய் டிவி தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 கலந்துகொண்டு மேலும் பிரபலமடைந்தார்.

இதனையடுத்து அவர் தமிழ்த் திரையுலகில் ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் சில காலங்களாக ஊடகங்களை விட்டு சற்று விலகி உள்ளார். மேலும் சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஜூலி அவர்கள் அவ்வப்போது தனது க்யூட்டான புகைப் படங்களை வெளியிடுவது மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை விளைவித்தது. எனவே இதனை தொடர்ந்து இந்திய அரசு நாடு முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இத் தடை ஏப்ரல் 14 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்  பாதிக்கபடுகிறது. இந்த நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க வெளிவரத் தொடங்கியுள்ளன. இதனால் அரசு விழிப்புணர்வு வீடியோக்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நாயகி ஜூலி அவர்கள் கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் கூறியதாவது இந்தக் கொரோனா மிகப்பெரிய ஆபத்து தயவுசெய்து இதை யாரும் சாதாரணமாக நினைக்காதீர்கள். இதை நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து தான் தடுக்க முடியும் ஒன்று சேர்ந்தால் என்றால் கைகோர்த்து அல்ல தனித்தனியாக இருந்தால் போதும் தயவுசெய்து காய்கறி வாங்க போறேன் மசாலா வாங்க போறேன் என்று கடைக்கு அடிக்கடி போகாதீர்கள் கடைக்குச் சென்றால் மூன்று நான்கு நாட்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வந்து விடுங்கள் முக்கியமாக மாஸ்க் அணிந்து செல்லுங்கள்.

அந்த மாஸ்க்கை 4 மணி நேரம் உபயோகித்து விட்டு பின் தூக்கி போடுவதற்கு முன் கழுவி தூக்கி போடுங்கள். நம் வீட்டிலிருக்கும் குழந்தைகள் அந்த மாஸ்க்கை எடுத்து பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அதனால் மிக கவனமாக இருங்கள் தங்களுடைய உயிரை கூட பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கும் நம் அரசு போலீஸ் அதிகாரிகள், டாக்டர், நர்ஸ் சுகாதாரத் துறையை சார்ந்தவர்கள், நமக்கு உதவி செய்யும் தன்னார்வலர்கள் என எல்லோருக்கும் நன்றி என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர் இவ்வளவு கருத்தா பேசுறியே நாயே சாரி தாயி நீ ஒரு சிஸ்டர் தானே சர்வீசுக்கு கிளம்பலாம் இல்ல அப்படியாவது செத்து எங்களுக்கு நல்லது பன்னு வீர தமிழச்சி என்ற கமெண்ட் போட்டுள்ளார். அதை பார்த்த ஜூலி மிகவும் கோபமடைந்து என்ன தைரியமிருந்தால் செத்துப்போ என்று சொல்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று கூறியிருந்தார் தற்பொழுது இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.